illegal love
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (44). கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், உறவினரான சின்னப்பொண்ணு (43) என்பவருடன், ஜெய்சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
Wife Suicide
இந்த விவகாரம் மனைவிக்கு சாந்திக்கு தெரியவந்ததை அடுத்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஜெய்சங்கர் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை சாந்தியின் செல்போனுக்கு ஜெய்சங்கர் அனுப்பி வைத்தார். மேலும், இதுபோல், உன்னால் எனக்கு சந்தோசம் கொடுக்க முடியாது என மெசேஜ் அனுப்பினார். இதனால், மன வேதனையில் சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி! ஆத்திரத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட வங்கி ஊழியர்! அதிர்ச்சியில் கணவர்.!