கள்ளக்காதலியுடன் உல்லாசம்! வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி இதுபோல சந்தோசம் கொடுக்க முடியுமா கேட்ட கணவர்!

First Published May 5, 2024, 7:05 AM IST

மனைவிக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். 

illegal love

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (44).  கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், உறவினரான சின்னப்பொண்ணு (43) என்பவருடன், ஜெய்சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Wife Suicide

இந்த விவகாரம் மனைவிக்கு சாந்திக்கு தெரியவந்ததை அடுத்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஜெய்சங்கர் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை சாந்தியின் செல்போனுக்கு ஜெய்சங்கர் அனுப்பி வைத்தார். மேலும், இதுபோல், உன்னால் எனக்கு சந்தோசம் கொடுக்க முடியாது என மெசேஜ் அனுப்பினார். இதனால், மன வேதனையில் சாந்தி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி! ஆத்திரத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட வங்கி ஊழியர்! அதிர்ச்சியில் கணவர்.!

Police Arrest

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிதாக இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தாரமங்கலம் அருகே பண்ணப்பட்டி பகுதியில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க:  ஊழியரை 2 நாட்கள் குடோனில் வைத்து கேஜிஎப் விக்கி செய்த காரியம்! தலைமறைவாக இருந்தவரை தொக்காக தூக்கிய போலீஸ்!

click me!