இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனைகளை தான் சந்தித்து வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட குறிப்பிட்ட சில வகை உணவுகளை மட்டும் சாப்பிட்டால் போதும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து எளிதில் விடுபடுவீர்கள். அவை..
பச்சை இலை காய்கறிகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு தினமும் சாப்பிட்டு வந்தால் மூளையில் செரோடோனின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி, இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்கும். அதாவது, நீங்கள் கவலைப்படும்போது, வெளியிடப்படும் ஹார்மோன்கள் குறைக்கப்படுகின்றது. அதுபோல, ஓட்ஸ் கூட மன அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D