சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'. ஆணாதிக்கம் கொண்ட ஒரு மனிதரை பற்றியும், அவருக்கு எதிராக துணிந்து போராடும் 4 பெண்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இந்த தொடர்.
தான் நினைத்ததை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, பெற்ற மகளையே கடத்த துணிந்தவர் தான் குணசேகரன். கடத்தப்பட்ட தர்ஷியை போலீசார் கண்டுபிடித்து விட்டதால்... தன்னுடைய மகள் பள்ளி செல்பவர் என்று தெரிந்தும் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். சித்தார்த் - தர்ஷினி திருமணத்தை தடுத்து, சித்தார்த்துக்கு, ஜனனியின் தங்கை அஞ்சலியை திருமணம் செய்து வைக்க குணசேகரனி ஒட்டு மொத்த குடும்பமே போராடியது.
Nepolean: நடிகர் சங்கம் கட்டிட பணிக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்!
இதுநாள் வரை தான் நினைத்த அனைத்திலும் ஜெயித்த குணசேகரன்... இந்த திருமண விஷயத்தில் தோல்வியை சந்தித்தார். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடைந்து போன குணசேகரனை தாறுமாறான கேள்விகளால் தெறிக்க விட்டார்.
பின்னனர் ஞானம் எப்படி எங்க அண்ணனை எங்க அம்மா வளர்த்தாரோ அப்படி தான், எங்களையும் வளர்த்தார் என கூற, இதற்க்கு ஜனனி இதை உங்க அம்மா சொல்லுவாங்களா என கூற, விசாலாட்சி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.