எந்த தெய்வங்களுக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெரியுமா..? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன.?

First Published May 8, 2024, 7:49 PM IST

உங்களுக்கு தெரியுமா.. இந்து மதத்தில் வாழை இலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, இது அனைத்து தெய்வ வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. 
 

இந்து மதத்தில் வாழை இலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சொல்லபோனால், வாழை இலை மங்களம் மற்றும் தூய்மையின் சின்னமாக கருதப்படுகிறது. வாழை இலையில் விஷ்ணுவும் லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். நவக்கிரக பூஜையில் ஒன்பது வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றது.

திருமணம், இல்லறம், பெயர் சூட்டுதல் போன்ற சுப காரியங்களில் உணவுகள் பரிமாற வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. அதுமட்ட், 
கிரஹ பிரவேச நேரத்தில், வாழை இலையில் தான் அரிசி மற்றும் குங்குமம் போன்ற பல பொருகள் வைக்கப்படுகிறது. இந்து மத திருமணத்தில் மணமக்களை வாழை இலையில் அமர வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாழை இலைகள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றது. மேலும், பிரதான நுழைவாயிலில் வாழை இலைகளை வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது என்று சொல்லப்படுகின்றது. மேலும்,  வாழை இலையை வீட்டில் பூஜை அறையில் வைப்பதால் அமைதி கிடைக்கும். அதுமட்டுமின்றி பித்ரு தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற வாழை இலையில் அன்னதானம் செய்ய வேண்டும். இப்போது,   எந்தெந்த தெய்வங்களுக்கு  வாழை இலையில் அர்ச்சனை செய்வது நன்மை பயக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

விஷ்ணு பகவான்: விஷ்ணு பகவானுக்கு வாழை இலையில் துளசி, தாமரை மலர்கள் மற்றும் பழங்களை வைத்து அர்ச்சனை செய்தால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வரும் மற்றும் ஜாதகத்தில் கிரகங்களின் நிலை சரி செய்யப்படும். குறிப்பாக, விஷ்ணு பகவானின் ஆசிகள் தக்க வைக்கப்படுகிறது.

விநாயகப் பெருமான்: விநாயகப் பெருமானுக்கு வாழை இலைகள் மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, விநாயகருக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், புதன் தோஷம் நீங்கும் மற்றும் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

லட்சுமி தேவி: லட்சுமி தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், நல்ல பலன்கள் வரும். அதுமட்டுமின்றி, செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், வாழ்க்கையில் பணத்திற்கு ஒருபோதும் வராது. இது தவிர, நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்தால், அதிலிருந்தும் உங்களுக்கு  நிவாரணம் கிடைக்கும்.

துர்கா தேவி: துர்கா தேவிக்கு வாழை இலையில் அர்ச்சனை செய்தால், வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்படாது என்பது ஐதீகம். அதுமட்டுமய், வேலையில் இருக்கும் தடைகள் நீங்கும்.

click me!