எச்சரிக்கை.. உங்களிடம் 'இந்த' பழக்கம் இருக்கா..? சனியின் கோபத்திற்கு ஆளாவது உறுதி!

First Published Apr 12, 2024, 8:07 PM IST

ஒவ்வொரு மனிதனுக்கும் சில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். எனவே, எந்தெந்த கெட்ட பழக்கங்கள் எந்த கிரகத்திற்கு கோபத்தை உண்டாக்கும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் மரியாதை மற்றும் மதிப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம் தீய பழக்கவழக்கங்கள் அவர்களின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும். 

ஜோதிடம் படி, கிரகங்களின் தாக்கத்தால், நல்ல அல்லது கெட்ட பழக்கங்கள் ஏற்படுகின்றன. அதுவும் குறிப்பாக பலமான கிரகங்கள் கூட கெட்ட பழக்கங்களால் பலவீனமாகின்றன. எனவே, எந்தெந்த கெட்ட பழக்கங்கள் எந்த கிரகத்திற்கு கோபத்தை உண்டாக்கும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஆட்டுவது:  சிலருக்கு உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கும். ஆனால், இது நல்லதல்ல. இது சந்திரன் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது. மேலும், ஓய்வு நேரத்தில் உட்கார்ந்து கால்களை ஆட்டுபவர்களின் மனநிலையும் பலவீனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்தகைய நபர்கள் அதிக பதட்டத்திற்கு ஆளாவார்கள். எனவே, இத்தகைய சூழ்நிலையில், இந்த கெட்ட பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது மிகவும் நல்லது.

நகம் கடிப்பது: சிலருக்கு நகங்களை கடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்டவர்களிடம் சூரியன் வலுவிழக்கத் தொடங்குகிறது. மேலும், அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். எனவே, இப்படிப்பட்டவர்கள் சூரிய கிரகத்தின் சுப பலன்களை விரும்பினால், நகங்களைக் கடிப்பதை  உடனே நிறுத்துங்கள்.

இதையும் படிங்க:  சனி பகவானின் அருள் கிடைக்க.. உடனே இவற்றைச் செய்யுங்கள்!!

படுக்கையறை அல்லது குளியலறையை அசுத்தமாக இருப்பது: உங்களது படுக்கையறை அல்லது குளியலறையை அசுத்தமாக இருந்தால் வீனஸ் பலவீனப்படும். எனவே, அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது ரொம்பவே முக்கியம். அவை அசுத்தமாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்காது. அதே நேரத்தில், மன அழுத்தமும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  இந்த ஜோதிட பரிகாரங்களை இன்று மாலைக்குள் செய்யுங்கள்.. சனி பகவானின் அருள் கிடைப்பது உறுதி!

எச்சில் துப்பும் பழக்கம்: சிலருக்கு ஆங்காங்கே எச்சில் துப்பும் பழக்கம் இருக்கும். ஆனால், இது சரியல்ல. இந்த கெட்டப் பழக்கத்தால் பலர் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள். குறிப்பாக இந்த கெட்ட பழக்கத்தால் சனி பலவீனம் அடைகிறார். எனவே, இந்த பழக்கத்தை  உடனே கைவிடுங்கள். இல்லையெனில், சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். கவனம் தேவை.. இங்கு சொல்லப்பட்டுள்ள கெட்ட பழக்கங்களை கைவிட்டால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!