ஆணுறை குறித்து விளக்கியது சரியா..? இல்லை தவறா..? சிம்பு பட நடிகையின் பேச்சால் சர்சையை கிளப்பிய பயில்வான்!

First Published May 19, 2022, 2:40 PM IST

Bayilvan Ranganathan about Nidhhi Agerwal Advertisement video: சர்சைக்கு பேர் போன பயில்வான் ரங்கநாதன், நிதி அகர்வால்  ஆணுறை குறித்து இப்படி சொன்னால் சரி..? நான் சொன்னால் தவறா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Niddhi agerwal

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் நிதி அகர்வால், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக  'பூமி' படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களின் வரிசையில், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

Niddhi agerwal

நிதி அகர்வால் நடிகர் சிம்புவுடன் காதலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும், தனி வீட்டில் தங்கியிருந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Niddhi Agerwal

இந்நிலையில், நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரம் குறித்து வெளிப்படையாக பேசிய அவர், செக்ஸ் விஷயத்தில் பெண்களுக்கு ஆணுறை மிக மிக முக்கியம் என்றும் பெண்கள் கண்டிப்பாக இதனை பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும், பெண்கள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடனும்,  உஷாராகவும் இருக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். 

Niddhi Agerwal

இந்நிலையில் தனது யூடியூப் வீடியோவில் இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகைகள் கூறும் விஷயத்தைதான் நான் சொல்கிறேன்.  நிதி அகர்வால் இப்படி சொன்னால் சரி..? நான் சொன்னால் தவறா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  தற்போது இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன் 80ஸ் கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர். பத்திரிக்கையாளரான இவர், நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர், தனக்கென ஒரு யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி சினிமாவில் நடக்கும் பல்வேறு கிசு கிசு தகவல்களை வெளியிட்டு வருகிறார். 

Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன், குறிப்பாக பெண் நடிகைகள் குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதனால் அவர் வெளியிடும் வீடியோக்களுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அவர் அவதூறாக பேசுவதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் காவல் துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...15 ஆண்டு கால திரைப்பயணத்திற்கு கிடைத்த வெற்றி...கேன்ஸ் விழா இந்தியாவிற்கு வரும்...தீபிகா படுகோனே நெகிழ்ச்சி..

click me!