அரியலூர் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்து.. 30 பேரின் நிலைமை என்ன?

First Published Oct 8, 2023, 3:18 PM IST

அரியலூர் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரியலூரில் இருந்து கும்பகோணத்துக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து இன்று காலை சென்றுக்கொண்டிருந்தது. சுந்தரேசபுரம் அருகே வந்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளாகி அரசு பேருந்து டிரான்ஸ்பாஃர்மரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர்  காயமடைந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!