Kovai sarala: அப்பா இறந்ததுக்கு கூட போகல.. பணத்துக்காக இப்படி செய்தாரா கோவை சரளா - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்

First Published May 8, 2024, 9:02 AM IST

நடிகை கோவை சரளா, தனது தந்தை இறந்ததுக்கு கூட செல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Kovai Sarala

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் மிகவும் குறைவு. அதிலும் காமெடி நடிகையாக நடித்து புகழ்பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த பட்டியலில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கோவை சரளா. இவர் 9-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் வெள்ளி ரத்னம். இதையடுத்து 10-ம் வகுப்பு படிக்கும்போதே 32 வயது கர்ப்பிணிப்பெண்ணாக முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார் கோவை சரளா.

Actress Kovai Sarala

இதையடுத்து கமலுடன் சதி லீலாவதி, வடிவேலு ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா போன்ற படங்கள் கோவை சரளாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கோவை சரளா, 62 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார் கோவை சரளா.

இதையும் படியுங்கள்... 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி... இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?

Kovai Sarala age

காஞ்சனா படங்களில் ராகவா லாரன்ஸின் அம்மாவாக நடித்து அசத்திய இவர், அண்மையில் வெளிவந்த அரண்மனை 4 படத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தார். இந்த நிலையில், நடிகை கோவை சரளா, தான் தன்னுடைய தந்தையின் மறைவுக்கு கூட செல்லாததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி, கோவை சரளா படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டாராம். 

Kovai Sarala says about her father

தந்தை இறந்த செய்தி கேட்டும் அவர் செல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். ஏனெனில் அவர் நடிக்கும் படத்தை சின்ன தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து வந்ததாம். தான் சென்றுவிட்டால் அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தந்தை மறைவுக்கு கூட செல்லாமல் அவர் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்றாராம். அவர் பணத்திற்காக தான் இப்படி செய்தார் என்று அந்த சமயத்தில் தன்னை விமர்சித்தார்கள் என்று வருத்தத்துடன் கூறி இருக்கிறார் கோவை சரளா.

இதையும் படியுங்கள்... Nayanthara Photos: கலக்கலான பார்ட்டி வேர் அணிந்து கடற்கரையில் காதல் கணவர் விக்கியுடன் நயன்! வைரலாகும் போட்டோஸ்

click me!