அதாவது, சண்முகம் வீட்டுக்கு ஒரு பாட்டியை தூக்கி வந்து உட்கார வைக்க, கனி வயசுக்கு வந்துட்டா செய்ய வேண்டியது செய்ய என்று சண்முகம் சொல்ல அதனால் நான் பாத்துக்குறேன் நீ போடா என்ன பாட்டி சொல்லிவிட்டு கனி அதே துணியில் இருப்பதால் மஞ்ச துணியை கட்ட சொல்லி சந்தனமெல்லாம் பூசி வாசல் பக்கம் உட்கார வைத்து மஞ்ச தண்ணி ஊத்தி சடங்கு செய்கின்றனர்.
மறுபக்கம் இசக்கி கனியை பார்த்தே ஆகணும் அடம் பிடித்து உட்கார பாக்கியம் எவ்வளவு சொல்லியும் கேட்காத காரணத்தினால் பிறகு இருவரும் கிளம்பி கனியை பார்க்க வருகின்றனர். இங்கே சடங்கு முடிந்து ரத்னா காபி கொடுக்க வெங்கடேசன் அப்பா அம்மா தீட்டி வீட்டுல எப்படி சாப்பிடுவது என தயங்க வெங்கடேஷ் அதனால் என்ன இருக்கு நான் சாப்பிடுறேன் என காபி வாங்கி குடிக்க பரணி ரத்தினா கையால கொடுத்தால் வெங்கடேஷ் வேணான்னு சொல்லுவாரா என கலாய்க்கிறாள்.
Anna Serial
அதன் பிறகு வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி பாக்கியம் மற்றும் இசக்கி இல்லாமல் இருப்பதை பார்த்து எங்க போனாங்க என்று கேட்க சௌந்தரபாண்டி மனசு சரியில்லன்னு கோயிலுக்கு போய் இருப்பாங்க என்று சொல்ல முத்துப்பாண்டி திரும்பவும் சண்முகம் வீட்டுக்கு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு என சொன்னதும் சௌந்தரபாண்டி ஆமா உங்க அம்மா போயிருந்தாலும் போயிருப்பா உடனே நீ போய் என்னன்னு பாரு என சொல்லி அனுப்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.