Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி தூங்காமல் அழுது கொண்டிருக்கிற சண்முகம் என்னாச்சு என்று கேட்க அவள் தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகம் பரணியிடம் நான் உன்னை நம்ப மாட்டேன் என்று சொல்கிறான். பரணி என் மேல உனக்கு காதல் இல்லையா என்று கேட்க, சண்முகம் இல்லை என்று சொல்கிறான்.
Zee Tamil Anna Serial
பிறகு பரணி நான் அழாமல் இருக்க எனக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்து என்று சொல்கிறார். அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லும் சண்முகம், என்ன உன்ன சமாதானப்படுத்தணுமா என்று சொல்லி அரிவாளை தூக்கி அவளது கழுத்தில் வைக்க, வைகுண்டம் என் மருமகள் கழுத்துலையா கத்தியை வைக்கிற என எதிர்த்து கேட்க, சண்முகம் எஸ்கேப் ஆகி ஓடுகிறான். அடுத்ததாக மறுபக்கம் பாக்கியம் மற்றும் இசக்கி சிவபாலனிடம் நாளைக்கு இங்க நகைகளுக்கு கவரிங் நகை செய்ய ஏற்பாடு பண்ணு. இந்த நகை எல்லாம் கொடுத்து எப்படியாவது சண்முகத்தை அந்த ஸ்கூலை வாங்க வைக்கணும் என்று சொல்கின்றனர்.
இதையும் படியுங்கள்... கார்த்திகை தீபம் சீரியல் : ஆனந்துக்கு 2-வது கல்யாணம் ஆன மேட்டர்.. மீனாட்சி பெற்றோரின் காதுக்கு சென்றது எப்படி?
Anna Serial Update
அதேபோல் பணத்தை ரெடி பண்ணி அதை ரத்னாவிடம் கொடுக்க, அவள் வேண்டாம் என்று சொல்ல, கடனா வச்சுக்கோ என்று சொல்லி கொடுக்கின்றனர். பிறகு கவரிங் நகையுடன் பாக்கியம் வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி என்னடி நகை புதுசா பளபளக்குது என்று கேட்கிறார். அது கவரிங் நகை என்ற விஷயம் தெரிந்து விடுமா என்ற பயத்துடன் ஒரு வழியாக பாக்கியம் சௌந்தரபாண்டியை சமாளித்து உள்ளே செல்கிறாள்.
Anna Serial Today Episode
பிறகு ரத்னா கனியை ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது எதிரே வரும் முத்துப்பாண்டி உன்னை எப்படியாவது அந்த ஸ்கூல்ல வாங்கணும்னு நினைக்கிறான் ஆனா பணம் தான் இல்ல. அவனுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன் நீ எதுக்கு இன்னொருத்தனை கட்டிக்கிட்டு போய் கஷ்டப்படணும்? என் வீட்டுக்கே வந்து அக்கா உன் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்து ஒற்றுமையாக வாழுங்க என்று சொல்கிறான்.
இதைக் கேட்டு கோபப்படும் ரத்னா முத்துப்பாண்டி திட்டி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வர கனி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க சண்முகத்திற்கு விஷயம் தெரிய வந்து முத்துப்பாண்டியை வெட்ட அரிவாளுடன் கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... பாடலுக்கு எது முக்கியம்? புரிந்தவன் ஞானி; புரியாதவன் அஞ்ஞானி - இளையராஜாவுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த வைரமுத்து