Janhvi Kapoor : திருப்பதி படிக்கட்டில் முட்டிப்போட்டு ஏறிய ஜான்வி கபூர்.. இதுக்காக தானாம்.. அவரே சொன்ன தகவல்..

First Published Mar 25, 2024, 12:56 PM IST

ஜான்வி கபூர் தனது முழங்காலில் திருப்பதி கோயில் படிக்கட்டு ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அ

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு Dhadak என்ற இந்தி படத்தில் அறிமுகமான அவர் கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தேவாரா படத்திலும் நடித்து வருகிறார்.

ஏழுமலையானின் தீவிர பக்தையான ஜான்வி கபூர் அடிக்கடி திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் 2024 புத்தாண்டின் போது திருப்பதி சென்ற அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாத தொடக்கத்தில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஜான்வியின் காதலர் என்று கூறப்படும் ஷிகர் பஹாரியா மற்றும் சிறந்த நண்பன் ஒரி ஆகியோரும் அவருடன் சென்றனர்.

இந்த நிலையில் ஜான்வி கபூர் தனது முழங்காலில் திருப்பதி கோயில் படிக்கட்டு ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஜான்வி முட்டிப்போட்டுக் கொண்டு படிக்கட்டில் ஏறுவதை பார்க்க முடிகிறது.

முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான்வி "எனக்கு திருப்பதி கோவிலுடன் ஆன்மீக தொடர்பு உள்ளது, நான் கிட்டத்தட்ட 50 முறை திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளேன்..திருப்பதி பாலாஜி எனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் முழங்காலில் படிகளில் ஏறினேன்" என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் தனது காதலர் ஷிகர் மட்டுமின்றி, தனது சகோதரி குஷி கபூர் மற்றும் தந்தை போனி கபூர் ஆகியோருடன்  அடிக்கடி திருப்பதிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாரா படத்தை தொடர்ந்து ராம்சரண் நடிக்கும் படத்திலும் ஜான்வி நடிக்க உள்ளார். ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஜான்வி பிறந்தநாளான மார்ச் 6ம் தேதி வெளியானது. 

இதனிடையே, ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள டோலிவுட் ஸ்டார் ஹீரோ ராம் சரண் இல்லத்திற்கு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில்  பகிர்ந்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் பூஜையிலும் பங்கேற்றார். புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் வெளியீட்டு விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

click me!