இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ் (30), இவரது சகோதரர் கார்த்தி (21), உறவினர் குணா (20) ஆகியோரை சுட்டு பிடித்தனர். இதனையடுத்து காயம் குணமடைந்த பிறகு அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று பேரை காவலில் எடுத்த விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.