தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பது அதிதி ஷங்கர் தான். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர், விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி, முதல் படம் ரிலீசாகும் முன்பே அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருவது சர்ச்சையை கிளப்பியது.
இந்தி சினிமாவைப் போல் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் எனப்படும் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விஷயம் தலைதூக்குகிறதா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. நடிகை ஆத்மிகா கூட சமீபத்தில் அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இது ஒருபுறம் இருக்க தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் அதிதி.
மதுர வீரன் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி தானாம். புஷ்பா படத்தில் அவர் பாடிய சாமி சாமி பாடல் வைரல் ஹிட் ஆனதை அடுத்து மதுர வீரன் பாடலுக்கு அவரது குரல் எடுப்பாக இருக்கும் என கருதி பாட வைத்தாராம் யுவன். ஆனால் இறுதியில் பாடல் வெளியானபோது தனது குரலை நீக்கிவிட்டு ஷங்கர் மகள் அதிதியை பாட வைத்துள்ளதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டாராம் ராஜலட்சுமி.