இந்த ஆண்டு, அல்லு அர்ஜுன் கைது முதல் நடிகர் தனுஷ் - நயன்தாரா மோதல் வரை பல சர்ச்சைகள் திரையுலகை அதிர வைத்த நிலையில் இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
திரையுலகில் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே அதிக படியான ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, திரையுலகில் அதிகம் விவாதங்களுக்கு ஆளான 7 முக்கிய சர்ச்சைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
28
Allu Arjun Arrested
டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான 'புஷ்பா 2' படத்தின் ப்ரீமியர் காட்சி ஒரு நாளுக்கு முன்னதாகவே ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் போடப்பட்ட நிலையில், இதை அல்லு அர்ஜுன் பார்க்க சென்றார். அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், சரியான பாதுகாப்பு பணிகள் இல்லாத காரணத்தால், கூட்ட நெரிசலில் சிக்கி அல்லு அர்ஜுன் ரசிகை ரேவதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூனம் பாண்டே தனது மரணச் செய்தியைப் வெளியிட்டு பரபரப்பை வெளிப்படுத்தினார். பின்னர் அது விழிப்புணர்வுக்கான செயல் என்று கூறி அதிர வைத்தார். ரசிகர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளோடு பூனம் பாண்டே விளையாடுவதாக கூறி இவருக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
48
AMMA Members Resignation
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் மோகன்லால் உட்பட AMMA உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
நெட்ஃபிளிக்ஸ் தொடரான IC 814: தி கந்தஹார் ஹைஜாக், 1999 கடத்தலில் பயங்கரவாதிகளின் மத அடையாளங்களைக் குறைத்து மதிப்பிட்டதாகக் கூறப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
68
Nayanthara against dhanush before nayanthara beyond the fairy tale release
தனது நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில், 2015 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரௌடி' படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி நடிகர் தனுஷ் நயன்தாராவிடம் 10 கோடி இழப்பீடு கேட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்க்கு நயன்தாரா தனுஷை விமர்சித்து 3 பக்க அறிக்கை வெளியிட்டார். தனுஷ் தரப்பில் இருந்து, நயன்தாரா கூறியதில் உண்மை இல்லை என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறினார்.
கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகா சுவாமியைக் கொன்றதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட தர்ஷன், பவித்ரா கௌடா உட்பட ஏழு பேருக்கு, சமீபத்தில் தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
88
Atlee Kapil Sharma Issue
இயக்குனர் அட்லீயின் நிறம் குறித்து இனவெறி கருத்துகளைத் தெரிவித்ததற்காக, தொகுப்பாளர் கபில் சர்மா விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர் மன்னிப்பு கேட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.