இயக்குனர் பிரஷாந்த் நீலின் திறமையான இயக்கமும், யாஷின் அதிரடி நடிப்பும், KGF1 மற்றும் KGF2 ஆகிய இரண்டு பாடங்களின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. எனவே தற்போது யாஷின் ரசிகர்கள் எப்போது இந்த மூன்றாம் பாகம் உருவாகும் என கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர். ஏற்கனவே இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு துவங்குவது குறித்து எந்த தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை.
கேஜிஎஃப் 3 படம் குறித்த அப்டேட்டால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கேஜிஎஃப்3 படத்தின் ஸ்கிரிப்ட் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே வெளியாகியுள்ள தகவலின் படி, பிரஷாந்த் நீல் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தயார் செய்து விட்டதாகவும், கே.ஜி.எஃப் மூன்றாவது பாகத்தில், யாஷின் இளமை காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் காட்டப்படும் விதத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.