நடிகர் தனுஷ், கடைசியாக அவருடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில், வெளியான 'நானே வருவேன்' திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதை தொடர்ந்து, தனுஷ் தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
Dhanush
மேலும் இயக்குனர் எச்.வினோத் தற்போது நடிகர் அஜித்தை வைத்து இயக்கியுள்ள துணிவு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னரே... தனுஷ் நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்க்கு முன்னதாக தற்போது இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் எச்.வினோத் கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் குறித்து, இயக்குனர் எச்.வினோத் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தனுஷ் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.
இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாகவும், காவல் துறை அதிகாரி ஒருவர் சந்தித்த நிகழ்வை தான் இந்த படத்தில் படமாக இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காவல் துறை அதிகாரியாக தான் தற்போது தனுஷ் நடிக்க உள்ளார். இதுவரை காவல்துறை அதிகாரியாக தனுஷ் நடித்திராத நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விரைவில் இந்த படத்தின் பூஜை, மற்ற நடிகர்... நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்த்து உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளில் ஆர்வம் காட்டி வரும் வகையில் இந்த கதையையும் தேர்வு செய்துள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.