அந்த வகையில் முதலாவதாக வெளியான பெரிய படம் என்றால் அது அஜித்தின் வலிமை தான். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியான இப்படம் வெறிச்சோடி கிடந்த திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டத்தை வர வைத்து புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் வெளியானதால் திரையரங்குகள் திருவிழாக் கோலமாகின.