'டாக்ஸிக்' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா, அதிக சம்பளம் கொடுக்க முன்வந்தும், ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
நடிகர் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்திற்காக தற்போது அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படம் குறித்து பல ரகசியங்கள் காக்கப்படுகின்றன. கதை, நடிகர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா, முன்பு ஒரு நடிகருடன் 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
24
நயன்தாரா ரிஜெக்ட் பண்ணிய படம்
நயன்தாரா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் நடித்துப் புகழ் பெற்றவர். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நயன்தாராவுக்கு பெரும் மவுசு கூடியுள்ளது. 'ஜவான்' படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நயன்தாரா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டே இருக்கிறார். ஆனால், ஒரு நடிகருடன் மட்டும் 10 அல்ல, 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிய விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.
34
100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்
அந்த நடிகர் வேறு யாருமல்ல, சரவணன் தான். 2022-ல் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியானது. சரவணன் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க சரவணன் பல முயற்சிகள் செய்தார். ஆனால், நயன்தாரா எதற்கும் செவி சாய்க்கவில்லை. 'எனக்கு 10 கோடி அல்ல, 100 கோடி கொடுத்தாலும் வரமாட்டேன்' என்று கூறியிருந்தார். நயன்தாராவுக்குப் பதிலாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, சரவணனுக்கு ஜோடியாக நடித்தார்.
சம்பள விஷயத்தில் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட், நயன்தாராவை விட முன்னணியில் உள்ளனர். தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் 15 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் சரவணன் விஷயத்தில் நயன்தாரா ஏன் அப்படிச் சொன்னார் என்பது குறித்து பெரும் விவாதம் நடந்தது. ஆனால், இதுவரையில் இந்த விஷயம் குறித்து நயன்தாரா பேசவில்லை.
இந்நிலையில், ஒரு தமிழ் ஊடகத்தில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார். 'நயன்தாரா வீட்டின் முன்பு அடிக்கடி ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். பின்னர் அதே கார் ஒரு திருமணத்தில் காணப்பட்டபோது விஷயம் தெரிந்தது. அது லெஜண்ட் சரவணனின் கார். அவர் தனது படத்தில் நடிக்க நயன்தாராவை தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தார். பலமுறை அவர் வீட்டிற்கும் சென்ற விஷயம் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தனது படத்தில் நயன்தாரா நடிக்க இரட்டிப்பு சம்பளம் தருவதாகவும் கூறி இருக்கிறார். ஆனால் ஏனோ தெரியவில்லை, 100 கோடி கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கறாராகக் கூறிவிட்டார்' என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.