தளபதி படத்தோடு முடிந்த உறவு.. 32 ஆண்டுகளாக இளையராஜாவிடம் செல்லாத மணிரத்னம் - ஏன்?

Ansgar R |  
Published : Sep 16, 2024, 11:38 PM IST

Maniratnam About Ilayaraja : தமிழ் சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான பல திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்போடு வலம் வரும் இயக்குனர் தான் மணிரத்தினம்.

PREV
14
தளபதி படத்தோடு முடிந்த உறவு.. 32 ஆண்டுகளாக இளையராஜாவிடம் செல்லாத மணிரத்னம் - ஏன்?
Maniratnam

மணிரத்தினத்தை பொருத்தவரை அவருடைய தந்தை மற்றும் சகோதரர்கள் ஆகிய அனைவருமே சினிமா துறையில் தயாரிப்பு சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் தான். இளம் வயதில் பெரிய அளவில் சினிமா மீது ஆர்வம் இல்லாத மணிரத்தினம், தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது இயக்குனர் பாலச்சந்தரின் படங்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது நண்பர்களோடு இணைந்து திரைக்கதை அமைக்கும் பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார். அப்போது தான் கடந்த 1983ம் ஆண்டு உருவான "பல்லவி அணு பல்லவி" என்கின்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை மணிரத்தினம் இயக்குனராக தொடங்கினார். அந்த திரைப்படத்துக்கு இசையமைத்தது இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடவ என்ன கதை சொல்லப்போறாரோ? மாஸ் ஸ்பீச்சுடன் தயாரான "தலைவர்" - வேட்டையன் இசை வெளியீடு அப்டேட்!

24
Nayagan Movie

முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற உடனடியாக மலையாள மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் மணிரத்னம். 1984ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான். தன்னுடைய இரண்டு திரைப்படங்களுமே கன்னடம் மற்றும் மலையாள மொழியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் திரை உலகின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்படுகிறது. பிரபல நடிகர் முரளி நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான "பகல் நிலவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை மணிரத்தினம் தொடங்குகிறார். அந்த திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான். 

தொடர்ச்சியாக "இதய கோவில்", "மௌன ராகம்", "நாயகன்", "அக்னி நட்சத்திரம்", "கீதாஞ்சலி", "அஞ்சலி" மற்றும் "தளபதி" என்று தொடர்ச்சியாக 8 திரைப்படங்கள் இளையராஜாவோடு பணியாற்றினார் மணிரத்தினம்.

34
Roja movie

ஆனால் 1992ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு இசை ரூபத்தில் புதிய தென்றல் ஒன்று வீசத் தொடங்கியது. அதுவே இன்று இசை புயலாக இன்று மாறிய நிற்கிறது என்றால் அது மிகையல்ல. "ரோஜா" திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமானோடு இணைந்த மணிரத்தினம், அதற்குப் பிறகு இந்த 32 ஆண்டுகளில் வேறு எந்த இசையமைப்பாளரிடமும் சென்றதில்லை. அதே நேரம் இளையராஜாவுடனும் அவர் எந்த திரைப்படத்திலும் பணியாற்றவில்லை. "ரோஜா" தொடங்கி "Thug Life" திரைப்படம் வரை அவர் ஏ.ஆர் ரகுமானோடு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஏன் இளையராஜாவோடு திரைப்படங்களில் பணியாற்றுவதில் என்று அண்மையில் அவரிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது.

44
AR Rahman

இதற்கு பதில் அளித்த இயக்குனர் மணிரத்தினம் "இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமான் இவர்கள் இருவருமே இரு துருவங்கள். தங்களுடைய தொழிலில் அவர்களைப் போல நேர்த்தியான இரு கலைஞர்களை நம்மால் பார்க்கவே முடியாது. இளையராஜா என்று சொன்னாலே "ஜீனியஸ்" என்று ஒரே வார்த்தைகள் தான் நான் பதில் அளிப்பேன். அதே நேரம் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய இசை நுணுக்கங்களை மிகவும் உண்ணிப்பாக கவனிப்பவர். 

எந்த ஒரு பாடலாக இருந்தாலும் அதில் வரும் சிறு சிறு ஓசைகளுக்கு கூட மிகப் பெரிய முக்கியத்துவத்தை கொடுப்பார். இவர்கள் இருவருமே எனக்கு பிடித்தமான இசையமைப்பாளர்கள் தான், காலங்கள் மாற மாற ஏ.ஆர் ரகுமானின் இசைக்கு என்னுடைய திரைப்படங்கள் மாறியது. மற்றபடி இளையராஜாவை வேண்டுமென்றே நான் எந்த திரைப்படத்திலும் நிராகரித்தது கிடையாது. எப்பொழுதுமே என்னை பொறுத்தவரை இளையராஜா ஒரு ஜீனியஸ் ஆகவே திகழ்கிறார், அவருக்கு இணை அவரே" என்று கூறியுள்ளார்.

சமந்தாவுக்கு நாக சைதன்யா எப்படி ப்ரொபோஸ் செய்தார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories