காதல் மலர்ந்தது எப்படி?
கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் நண்பர் ஒருவர் மூலம் தான் அறிமுகமாகி உள்ளனர். இதையடுத்து இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையேயான நட்பு அடுத்தகட்டத்துக்கு சென்று காதலாக மாறியது. பின்னர் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக பயணிக்க ஆரம்பித்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு கே.எல்.ராகுலுக்கு காலில் காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றபோது அவரை முழுக்க முழுக்க உடனிருந்து கவனித்துக் கொண்டது அதியா ஷெட்டி. அந்த சமயத்தில் தான் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து இருவரும் வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய பின்னர் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!