ஆம், உண்மை தான் படத்தில் நடிகர் ராணா டகுபதி ரூ.3 கோடிக்கு மேல் சீட்டிங் செய்வதாக புகார் வந்தால் தான் பொருளாதார குற்றங்களுக்கு கீழ் விசாரணை செய்ய முடியும் என்று ரஜினிகாந்த் கூறுவார். ஆதலால், தான் 100 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும் என்று அமிதாப் பச்சன் கூறுகிறார்.
மேலும், இந்த சட்டத்தின் படி கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியில் வர முடியாது. அங்கீகாரம் இல்லாமல் டெபாசிட் செய்ய வலியுறுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அங்கீகாரம் இல்லாமல் முதலீடு அல்லது வைப்புகளை ஏற்றுக்கொள்வது என்றால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இதுவே ஏமாற்றிய பணத்தை திருப்பி தராவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், வசூலிக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.
திரும்ப திரும்ப இதே குற்ற செயலலில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.50 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையில் பாதிப்புகள் இருந்தால் அதனை விசாரிக்க டிஜிபி, சிபிஐயின் உதவியை நாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.