தூக்கத்திலேயே பிரிந்த மனோஜ் உயிர்; அன்று நடந்தது இது தான்! இளையராஜா செய்த உதவி என்ன?
உண்மையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிக்கையாளர் விகே சுந்தர் வெளிப்படையாக பேசியுள்ள தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
உண்மையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிக்கையாளர் விகே சுந்தர் வெளிப்படையாக பேசியுள்ள தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மனோஜின் கதாபாத்திரங்கள் பேசப்படாமல் போனது:
'தாஜ்மஹால்' படம் மூலமாக திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் இந்த படத்தை தொடர்ந்து, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், சாதூரியன், அன்னக்கொடி என்று 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். ஆனால், எந்தப் படத்திலும் இவரது கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் போனது.
சூரியை வைத்து அடுத்த படம் பிளான் பண்ணிய மனோஜ்:
இதனால் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 2023-ஆம் ஆண்டு வெளியான 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படமும் பெரியளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. அப்பா பாரதி ராஜா போல் ஒரு இயக்குனராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என ஆசை பட்ட மனோஜ், அதற்காக கதைகளும் தயாராகவே வைத்திருந்தார். சூரியை வைத்து அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக நடிகர் சூரியே சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூறினார்.
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த இளையராஜா!
அஞ்சலி செலுத்தாத பிரபலங்கள்:
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனோஜ் பாரதிராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் அஜித், ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோர் மனோஜ் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு ஆறுதலும் கூட அவர்கள் கூறவில்லை என்பது பலரின் ஆதங்கமாகவும் இருந்தது.
மனோஜ் கிரியேஷன்:
இந்த நிலையில் தான் மனோஜின் கடைசி நிமிடங்கள் குறித்து, பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "மனோஜ் பிறந்த பிறகு தான் பாரதிராஜாவிற்கு பேரும், புகழும் கிடைத்தது. படங்களும் ஹிட் கொடுக்க ஆரம்பித்தது. பட வாய்ப்புகளும் குவிந்தது. இவ்வளவு ஏன் மனோஜ் கிரியேஷனில் தயாரிக்கப்பட்ட எல்லா படங்களும் ஹிட் கொடுத்தன. இந்த நிலையில் தான் பாரதிராஜா மற்றும் மனோஜ் இருவரும் தங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்று தனித்தனியாக பிரிந்து வந்தார்கள்.
மனோஜ் பாரதிராஜா பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்; அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில்!
நிதி பற்றாக்குறை:
நடிகராக இருக்கும் போது மனோஜ் தன்னுடன் 'சாதூரியன்' படத்தில் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனோஜ் நடித்த படங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அதனால், மனோஜின் திருமணத்திற்கு பிறகு அவருக்கான செலவுகளை எல்லாம் பாரதிராஜா தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். மேலும், மார்கழி திங்கள் படத்தை இயக்கிய போதும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் கூட பாரதிராஜா தான் மறைமுகமாக உதவி செய்திருக்கிறார்.
மனோஜ் மற்றும் பாரதிராஜா இடையில் கருத்து வேறுபாடு:
படம் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸூக்கு தயாரான நிலையில் நிதி சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியின்றி மனோஜின் அம்மா தான் தனது நகைகளை கொடுத்து உதவி செய்திருக்கிறார். நகைகளை அடமானம் வைத்து தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இப்படி தனது மகனுக்காக பாரதிராஜா மட்டுமின்றி மனோஜின் அம்மாவும் உதவி செய்திருக்கிறார். இப்படியிருக்கும் போது மனோஜ் மற்றும் பாரதிராஜா இடையில் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. அதனால், தான் இருவரும் தனித்தனியாக வந்துவிட்டார்கள் என்று பலரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் துளி கூட உண்மையில்லை.
விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தை மிஸ் பண்ணிய மனோஜ் பாரதிராஜா! எந்த படம் தெரியுமா?
மனோஜ் உயிரிழந்த அன்று நடந்தது என்ன?
மனோஜ் தனது உடலை பாதுகாக்கவில்லை. அவருக்கு இளம் வயதில் இருந்தே சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. மேலும், கடந்த சில வருடங்களாக அவர் நிறைய ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதுதான் அவருக்கு இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் தான் ஆகியிருக்கிறது.
மனோஜ் உயிரிழந்த நாளன்று பிற்பகல் சாப்பிட்டு விட்டு தூங்கியிருக்கிறார். அவர் எப்போதும் சாப்பிட்ட பின் தூங்குவது வழக்கம். ஆனால், அன்று அவர் தூங்கி எழவில்லை. அப்போது தான் அவர் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இதை மனோஜின் உறவினர் தான் என்னிடம் கூறினார். இயக்குநராக மனோஜ் ஆசைப்படும் போது, அதெல்லாம் வேண்டாம் என்று பாரதிராஜா மறுத்திருக்கிறார். அதற்கு காரணம், தான் பட்ட கஷ்டத்தை தனது மகனும் படக் கூடாது என்பதற்கு தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். இது முக்கிய முழுக்க அவர் அவர் மனோஜ் மீது வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடு மட்டுமே தவிர, அவரின் ஆசையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இளையராஜா செய்த உதவி:
அதே போல் நந்தனா மற்றும் மனோஜ் திருமணத்தை நடக்க முக்கிய காரணம் இளையராஜா தான். மனோஜ் மற்றும் நந்தனா திருமணத்திற்கு பாரதி ராஜா மகனுக்காக சம்மதம் கூறினாலும், நந்தனா வீட்டில் சம்மதம் சொல்லவில்லை. அப்போது இளையராஜா தான் மனோஜ் மிகவும் நல்ல பையன் என கூறி வீட்டிலும் சொல்லி சம்மதிக்க வாங்கி கொடுத்து உதவி இருக்கிறார். 2 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மனோஜ் - நந்தனா காதலின் அடையாளமாக அவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் மதிவதனி தற்போது திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இளயமகள் அர்த்திகா கல்லூரியில் படித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
பார்த்த நொடியே நந்தனா மீது காதலில் விழுந்த மனோஜ்; நெஞ்சை தொடும் லவ் ஸ்டோரி!