அதோடு அப்பத்தா தனக்கு சொந்தமான 40 சதவீத சொத்தை, பிரித்து சிலர் பெயரில் எழுதியதால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன், அவரை சமாதம் செய்வது போல் ஒரு டம்ளரில் பால் கொடுக்க, அதைக் குடித்த அப்பத்தா அப்படியே கட்டிலில் சாய்ந்து விடுகிறார். அவருக்கு என்ன ஆனது என குடும்பமே பதறி விடுகிறது. கதிர் மற்றும் ஞானம் உடனடியாக அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக காரில் ஏற்றி, எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாமல் உள்ளனர். மற்றொரு புறம், ஜனனி, சக்தி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி ஆகியோர் அப்பத்தாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D