கொரோனா ஊரடங்கு சமயத்தில் பெரும்பாலான தொழில்கள் நஷ்டத்தை சந்தித்தாலும், அந்த நேரத்தில் ஓஹோன்னு வளர்ச்சி கண்டது ஓடிடி தளங்கள் தான். ஓடிடி தளங்களின் வளர்ச்சியை கொரோனாவுக்கு முன், பின் என பிரித்துவிடலாம். அந்த அளவுக்கு அவை அசுர வளர்ச்சி கண்டுள்ளன. ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால், படங்களை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறின.