அவர் வேண்டுமென்றே ஒரு அலுவலகத்தை போட்டு ஒரு போட்டோஷூட்னு சொல்லி பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் தான் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறான் என்றால் அவனை செருப்பாலயே அடிக்கும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். எங்களிடம் யாரேனும் இதுதொடர்பாக புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் கூறினார்.
அப்போது உங்கள் மீதே ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தாரே என்கிற கேள்வி கேட்டதும், சிரித்துக்கொண்டே பதிலளித்த விஷால், ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும் என கூறினார்.