பிறந்தநாளில் அப்பாவாக போகும் தகவலை வெளியிட்ட விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய்! வைரலாகும் போட்டோஸ்..!

Published : Oct 13, 2022, 11:23 PM IST

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா இந்த ஆண்டு, தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் விரைவில் பெற்றோராக போகும் தகவலை பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.   

PREV
17
பிறந்தநாளில் அப்பாவாக போகும் தகவலை வெளியிட்ட விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய்! வைரலாகும் போட்டோஸ்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

27

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகர், பாடகிகளாக உயர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.

மேலும் செய்திகள்: Ajith Kumar Bike Trip: தாய்லாந்தில் பைக்கில் சீறி பாய்ந்த அஜித்..! வேற லெவலுக்கு மாஸ் காட்டிய புகைப்படம்..!
 

37

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்டவர் என்ற தனி சிறப்பும் இவருக்கு உண்டு.

47

இவர் ஒரு 'கண்ணான கண்ணே' பாடலை பாடி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போது... ஒரு ரசிகையாக இந்த பாடலை பாராட்டி பதிவு போட்டவர்தான் ஜெஸ்ஸி. இதற்கு அஜய் கிருஷ்ணாவும் நன்றி என கூற... இருவரும் அப்படியே பேசி பழகி பின் காதலிக்கவும் தொடங்கினர்.

மேலும் செய்திகள்: விரைவில் ரகுல் பிரீத் சிங்கிற்கு டும்.. டும்.. டும்.! அட அவரும் ஒரு பிரபலமா..? சகோதரர் வெளியிட்ட சூப்பர் தகவல்
 

57

இவர்களது திருமணத்திற்க்கு பெற்றோரும் சம்மதம் கூற, ஹிந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினர்.

67

மிகவும் விறுவிறுப்பாக இவர்கள் விளையாடிவந்த நிலையில், திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். சூழ்நிலை காரணமாக வெளியேறியதாக அப்போது தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: Sneha Photos: 40 வயதை கடந்தாலும் மங்காத அழகு..! கணவரை கட்டி பிடித்து... குடும்பத்துடன் குதூகலம் பண்ணும் சினேகா
 

77

மிகவும் விறுவிறுப்பாக இவர்கள் விளையாடிவந்த நிலையில், திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். சூழ்நிலை காரணமாக வெளியேறியதாக அப்போது தெரிவித்தனர்.ஆனால் தற்போது இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏன்? வெளியேறினார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஜெஸ்ஸி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த தகவலை அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது, இவர்கள் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories