விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்டவர் என்ற தனி சிறப்பும் இவருக்கு உண்டு.
இவர்களது திருமணத்திற்க்கு பெற்றோரும் சம்மதம் கூற, ஹிந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினர்.
மிகவும் விறுவிறுப்பாக இவர்கள் விளையாடிவந்த நிலையில், திடீர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். சூழ்நிலை காரணமாக வெளியேறியதாக அப்போது தெரிவித்தனர்.ஆனால் தற்போது இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏன்? வெளியேறினார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஜெஸ்ஸி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த தகவலை அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது, இவர்கள் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.