பல தொலைக்காட்சிகளில், எத்தனையோ சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் சன்டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
24
டிஆர்பி யில் கூட இந்த இரு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் ஒவ்வொரு வாரமும் ரேட்டிங்கில் முட்டி மோதி கொள்கின்றன.
குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், இல்லத்தரசிகளை தாண்டி சிறியவர்கள் மற்றும் இளைஞர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுவது, இந்த சீரியலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
44
kaatrukkenna veli
சமீபத்தில் தான் 'பாரதி கண்ணம்மா' சீரியல் முடிவடைந்து, 'பாரதி கண்ணம்மா 2' சீரியல் துவங்கப்பட்டது. மேலும், இன்னும் சில புது சீரியல்கள் வர உள்ளதக கூறப்படும் நிலையில், தன்னுடைய தாய் - தந்தையை சேர்ந்து வைக்க போராடிய நாயகியின் கதையை கூறி வரும் மௌன ராகம் 2 மற்றும் தந்தையின் மனதை வென்று, படிப்பிலும், காதலிலும் ஜெயிக்க நினைக்கும் பெண்ணின் கதையை கூறி வரும் 'காற்றுக்கென்ன வேலி' ஆகிய 2 சீரியல்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.