அந்நிகழ்ச்சியின் போது, அதில் நடுவர்களில் ஒருவரான பாடகர் சங்கர் மகாதேவன், நீ சினிமாவில் நடிகனாக கலக்குவடா என ஒரு எபிசோடில் சொல்லி இருப்பார். அவர் சொன்னது போலவே இவருக்கு பாடல் பாட கிடைக்கும் வாய்ப்பை விட சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்துள்ளது. இவர் இதுவரை நடிகர் விஜய் உடனே பிகில், மாஸ்டர் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துவிட்டார்.
சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் பூவையார். இதுதவிர பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகி வைரல் ஹிட்டான வெறித்தனம் பாடலை நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பாடி அசத்தி இருந்தார் கப்பீஸ் பூவையார்.