தளபதி விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் இடையே விரிசல் விழுந்துள்ளதா? தந்தையின் உதவியின்றி சஞ்சய் போராடுவது ஏன்? தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் எழுப்பியுள்ள அதிரடி கேள்விகள் மற்றும் சர்ச்சைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகள், தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகப் பரவும் செய்திகளுடன் த்ரிஷாவின் பெயரும் இணைத்துப் பேசப்படுவது சர்ச்சையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அண்மையில் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள், இவர்களின் உறவு குறித்துப் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன. அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் விஜய்யின் அரசியல் அனுபவத்தைக் கேள்வி எழுப்பும் போது த்ரிஷாவைக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
35
PT Selvakumar Interview Vijay
இதற்குப் பதிலடி கொடுத்த த்ரிஷா, இது போன்ற கண்ணியமற்ற விமர்சனங்களை ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தனது வழக்கறிஞர் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். த்ரிஷா எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தான் எப்போதும் நடுநிலையானவள் என்றும் குறிப்பிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொது வெளியில் விமர்சிப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
45
பி.டி. செல்வகுமார் பேட்டி
மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பொது தாய், தந்தை, மகன், மகள், மனைவிக்கு கொடுத்த பணத்தை கூட கடனாக கணக்கு காண்பித்து இருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேச்சு பொருளாக மாறியது. இதனிடையே விஜய்யின் மகன் 4 வருடமாக போராடி வருவதாக அவரின் முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் கூறியுள்ளார். ”ஜேசன் சஞ்சய்யின் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்ர படத்தி இயக்கி முடித்தார். ஆனாலும் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. 4 வருடம் கடந்துவிட்டன.
55
விஜய் மகன் சஞ்சய் சர்ச்சை
தனது மகனை நேரில் அழைத்து என்ன பிரச்னை, என்ன உதவி வேண்டும் என்று விஜய் கேட்டிருக்க வேண்டாம்? ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதேபோன்று அன்று எஸ்.ஏ. சந்திரசேகர் மட்டும் ‘என் பிள்ளை தானாக வளரட்டும்’ என்று நினைத்து அமைதியாக இருந்திருந்தால், இப்போது விஜய் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டிருக்க முடியுமா? ஒரு தந்தையாக விஜய் தோற்றுவிட்டார்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.