நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள விவகாரம் மிகப்பெரிய விவாதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் உறவினர்களையும் கோபப்படுத்தியுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆகி நான்கு மாதமே ஆகும் நிலையில், இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து இந்த விஷயம், பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.