44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் மோடி கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. அதுவும் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதனால், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிக பிரம்மாண்டமாக செய்திருந்தது.