ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறி வரும் சூரி... மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய காலத்தில், பல கஷ்டங்களை அனுபவித்தவர். தங்குவதற்கு இடம் கூட, இல்லாமல் தவித்த இவருக்கு நடிகர் போண்டா மணி தான், தன்னுடைய வீட்டில் தங்க வைத்து ஆதரவு கொடுத்தார். சில திரைப்படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் கூறி இருந்தார்.