ஞானவேலின் "வேட்டையன்" திரைப்படப் பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 171வது திரைப்படமாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்ளிருந்த அவர், விமான மூலம் சென்னை வந்த இறங்கினார். நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற "வேட்டையன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசினார்.
ஞானவேலின் "ஜெய் பீம்" திரைப்படத்தை குறித்து வெகுவாக பாராட்டி பேசிய ரஜினிகாந்த், பொதுவாக கருத்து சொல்லும் திரைப்படங்கள் தனக்கு பெரிய அளவில் செட்டாகாது என்றும், இருப்பினும் இந்த "வேட்டையன்" திரைப்படம் ஒரு ஸ்பெஷலான திரைப்படமாக தனக்கு இருக்கும் என்றும் பேசி இருந்தார். மேலும் இளம் வயதில் குழந்தையாக இருந்த அனிருத் பற்றி பல விஷயங்களை நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது குருவாக, பாலிவுட் உலகின் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிதாபச்சனின் திரை வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.