தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பேமஸ் ஆன சூரி, இன்று தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் தான். அவர் தன்னுடைய விடுதலை படத்தின் மூலம் சூரியை நாயகனாக நடிக்க வைத்து அவருக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை உலகறிய செய்தார்.
24
வெற்றிமாறன் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பின்னர் சூரிக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அதன்படி தற்போது கொட்டுக்காளி என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத்ராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர அமீர் இயக்க உள்ள புதிய படத்திலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் சூரி. மேலும் எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சூரி. இப்படி தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சூரிக்கு குவிந்து வருவதால் அவர் செம்ம குஷியில் உள்ளாராம்.
44
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் வெற்றிமாறன் எழுதிய கதையை தான் துரை செந்தில்குமார் இயக்க உள்ளாராம். இதன்மூலம் விடுதலை இரண்டு பாகங்களுக்கு பின் மீண்டும் வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் சூரி. வெற்றிமாறனின் கால்ஷீட் கிடைக்காமல் ஏங்கும் நடிகர்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து அவருடன் மூன்று படத்தில் பணியாற்றி வரும் சூரி நிஜமாகவே மச்சக்காரன் தான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.