கடந்த சில வருடங்களாக தெலுங்கு சினிமாவில், தாத்தா, அப்பா, போன்ற வலிமையான குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு, சமீப காலமாக வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை 9:45 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82, இவரின் மனைவி ஜலந்தரா ஒரு எழுத்தாளர் ஆவர். இரண்டு மகள்களும் உள்ளனர்.