Vanitha: நடிகை மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்..! என்ன நடந்தது? மகள் வனிதா விஜயகுமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!

First Published Nov 25, 2022, 9:59 PM IST

நடிகை வனிதா விஜயகுமார், பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில்... தன்னுடைய அம்மா மஞ்சுளா இறப்பதற்கு முன் மருத்துவமனையில் தன்னிடம் கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர், மறைந்த பழம்பெரும் நடிகை மஞ்சுளா. 1970 ஆம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசன் நடித்த 'சாந்தி நிலையம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்ஷகாரன்' படத்தின் கதாநாயகியாக மாறினார்.

இதை தொடர்ந்து, சதி லீலாவது, இதய வீணை, மறுபிறவி, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பேன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி, என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Ivana Photos: பட்டு சேலை அழகில்... ரசிகர்களை பாடாய் படுத்தும் 'லவ் டுடே' நாயகி இவனா! ரீசென்ட் போட்டோஸ்..!

திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்த போதே... 1976 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமாரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே முத்து கண்ணு என்கிற முதல் மனைவி இருந்த நிலையில், மனைவியின் சம்மதத்தோடு மஞ்சுளாவையும் மனம் முடித்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் விஜயகுமாருக்கு முதல் மனைவி மூலம் அருண் விஜய் என்கிற மகனும், கவிதா, அனிதா ஆகிய இரு மகளும் உள்ளனர். அதே போல் இரண்டாவது மனைவியான மஞ்சுளா மூலம்... வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். வனிதாவை தவிர மகன், மகள் என அனைவரிடமும் இணக்கமாக உள்ளார் என்பதும், வனிதாவை மீடியாவின் முன்பே தனக்கு அப்படி ஒரு மகள் இல்லை என கூறினார் என்பதை அனைவரும் அறிவர்.

Kayal Serial: 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! யார் தெரியுமா..?

இந்நிலையில் பலருக்கும் தெரியாத விஷயங்கள் குறித்து, வனிதா விஜயகுமார்... பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னை மகள் இல்லை என தன்னுடைய அம்மா - அப்பா கூறினாலும், இந்த பிரச்சனை நடந்த ஒரு மாதத்தில் மீண்டும் தன்னிடம் அம்மா பேச துவங்கி விட்டார். அம்மா வீட்டிற்கு அழைத்ததால் அங்கு சென்றபோது தந்தையும் தன்னிடம் சமாதானம் ஆகிவிட்டார். இது குறித்து ஒரு பேட்டியில் கூட எங்கள் இடையே இருந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக நான் கூறினேன் என பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் இருந்த போது, வழக்கறிஞரை கூப்பிடு உன்னை ஏமாற்றி விடுவார்கள். சொத்துகள் அனைத்திலும் உனக்கும் பங்கு இருக்க வேண்டும் என கூறினார். அதே போல் என்னை வீடியோ எடு என சொன்னார். அந்த நேரத்தில் முதலில் எனக்கு நீ தான் முக்கியம், அப்படி என்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் நன்றாக இருந்து விட்டு போகட்டும் என கூறினேன். 

Suriya Dance: நடிகர் சூர்யாவா இது? பிறந்தநாள் பார்ட்டியில் வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோ வைரல்..!

தன்னுடைய அம்மா மருத்துவமனையில் இருந்த போது, அவருடன் நான் தான் இருந்தேன்... அதன் பிறகு தான் அப்பா, உள்ளிட்ட அனைவருமே வந்தார்கள். அம்மா இறக்க போகிறார் என்பதை மருத்துவர் கூறிய பின்னர்... தன்னுடைய அப்பாவிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று தான் சொன்னார். அம்மா உயிருடன் இருக்கும் போது வேறு விதமாக பேசிய அப்பா, அவர் இறந்த பின்னர் அப்படியே மாறிவிட்டார் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

click me!