வனிதா ட்விட்டரை விட்டு ஓட்டம் பிடிக்க நயன்தாரா ட்விட் தான் காரணமா?

First Published Jul 22, 2020, 2:00 PM IST

வனிதா ட்விட்டரை விட்டு ஓட்டம் பிடிக்க நயன்தாரா ட்விட் தான் காரணமா? 
 

வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் குறித்து சோசியல் மீடியாவில் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதா அதிரடியாக ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகி இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
undefined
இந்நிலையில் ஏன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகினேன் என பதிலளித்த வனிதா, “ட்விட்டர் முழுக்க தனிப்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு போலியான மனிதர்களாக இருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான திரைபிரபலங்கள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள தந்திரமாக செயல்படுகிறார்கள்.
undefined
எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரமோ பண்பாடோ அல்ல. போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் அப்செட்டாக இருக்கிறேன். நான் ஒருபோதும் போலியாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். அதில் இருந்து சற்று விலகி இருக்கவே , இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
undefined
அதாவது வனிதாவின் வாயில் சிக்கி நல்லா வாங்கி கட்டி கொண்ட லட்சுமி ராமக்ருஷணன், ஒருவழியாக அதில் இருந்து மீண்டு, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு சப்போர்ட் செய்யப்போவதாக ஹாஷ்டாக் ஒன்றையும் பதிவிட்டார்.
undefined
இதை பார்த்த ட்விட்டர் பயனாளி ஒருவர், வனிதாவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக, நயன்தாரா கூட தான் திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்த, பிரபுதேவாவை காதலித்தார் அப்போது ஏன்? யாரும் வாய்திறக்க வில்லை என கேள்வி எழுப்பினார்.
undefined
இதை பார்த்து கடுப்பான நயன்தாராவின் ரசிகர்கள்... அந்த நபரின் ட்விட்டருக்கு, நயன்தாரா காதலித்து திருமணம் செய்ய இருந்தது உண்மை தான். ஆனால் அவர் விவாகரத்து வாங்கிய பிறகே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் வனிதா விவாகரத்து வாங்குவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு, ரொம்ப ஓவரா பேசுகிறார் என வெளுத்து வாங்க துவங்கினர்.
undefined
இதன் காரணமாக கூட கடுப்பாகி, வனிதா ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம் என்கிற பேச்சு அடிபட்டு வருகிறது. சம்மதமே இல்லாமல் நயன் பற்றிய ட்விட்டரில் சிக்கியதால் தான் வனிதா வெளியேறினாரா? என்பதை அவர் தான் கூறவேண்டும்.
undefined
click me!