சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் இயக்குனர் பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவர் நயன்தாராவை காதலித்தது மிகவும் பேசுபொருள் ஆனது. இந்த விஷயம் அறிந்த பிரபுதேவாவின் மனைவி, நயன்தாராவை பார்த்தால் செருப்பால் அடிப்பேன் என பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டதோடு, இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதற்காக பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக் கொண்ட நயன்தாரா, சினிமாவில் இருந்து விலகவும் முடிவு செய்தார். சீதா ராமராஜ்ஜியம் என்கிற தெலுங்கு படம் தான் தனது கடைசி படம் எனக் கூறி அப்படத்தின் ஷூட்டிங் முடியும் போது நயன்தாரா கண்ணீர்மல்க விடைபெற்ற வீடியோவும் வெளியானது. ஆனால் இந்த காதலும் நயன்தாராவுக்கு கைகூடாமல் போனது. திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபுதேவாவை பிரிந்ததோடு, அவர் நியாபகார்த்தமாக கையில் பச்சைகுத்திய அவரது பெயரை அழித்து பாசிடிவிட்டி என மாற்றிக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... படுக்கை அறையில் தன் செல்லத்தை கட்டிப்பிடித்து... காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ