இதுபோல் வைரமுத்து எழுதிய ஒரு பாடலில் இடம்பெற்ற வார்த்தையை நீக்கிவிடுமாறு ஜானகி கேட்டும் அதை வைரமுத்து நீக்க மறுத்து, பின்னர் குற்ற உணர்ச்சியால் அவர் முன் கலங்கி நின்றதாக கூறியுள்ளார். இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல் ஓவியம்'. இந்த படத்தில், கண்ணன் ஹீரோவாக நடிக்க, ராதா கதாநாயகியாக நடித்திருந்தார்.
உணர்வு பூர்வமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், வைரமுத்து மொத்தம் 6 பாடல்களை எழுதி இருந்தார் . அதில் ஜானகி "நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன் ராஜராகம் பாடும் நேரம்" என்கிற பாடலை சோலோவாக பாடி இருந்தார்.