கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான "அரவிந்தன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கினார் யுவன் சங்கர் ராஜா. அந்த முதல் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தாலும், தொடர்ச்சியாக அவருடைய இசையில் வெளியான பல திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. குறிப்பாக 1999ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் வெளியான "பூவெல்லாம் கேட்டுப்பார்" திரைப்படத்தில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானாலும், படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.