
இன்றைய தேதியில் தளபதி விஜயின் திரைப்படங்களில் வெளியாகும் மெலடி பாடல்கள், பெரிய அளவில் ஹிட்டாவதில்லை என்றாலும் கூட, ஒரு காலகட்டத்தில் தளபதி விஜயின் திரைப்படம் என்றாலே அதில் மெலடி பாடல்களுக்கு பஞ்சமே இருக்காது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கும் தனது படத்தில் வரும் பாடல்களுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய். காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, நெஞ்சினிலே, துள்ளாத மனமும் துள்ளும் என்று விஜயின் பல திரைப்படங்கள் பாடல்களுக்காக பெரிய அளவில் பேசப்பட்டது.
இன்னும்சொல்லபோனால் கடந்த 1999ம் ஆண்டு பிரபல இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் தான் "மின்சார கண்ணா". அருமையான கதையாக இருந்தாலும், அப்போது இந்த படம் தளபதி விஜய்க்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. ஆனால் பாடல் பெரிய அளவில் செல்லவில்லை என்றாலும், அந்த படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் 25 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பெரிய அளவில் பலராலும் விரும்பப்படுகிறது என்றால் அது மிகையல்ல. தேவா இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியது வாலி தான்.
வேட்டையனை காலி செய்ய இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மூவீஸ் லிஸ்ட் இதோ!!
ஒரு காலக்கட்டத்தில், அதாவது தளபதி விஜய்.. இளைய தளபதியாக, காதல் மன்னனாக வலம்வந்த காலத்தில் அவருடைய பல படங்களுக்கு பாடல் வரிகளை எழுதி அசத்தியவர் தான் வைரமுத்து. அதிலும் குறிப்பாக கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஷாஜகான் திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதியது வைரமுத்து. 23 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தளபதி விஜய் டாப் ஹீரோவாக உருவாகிக்கொண்டிருந்த காலத்திலேயே அவர் துணிந்து நடித்த படம் அது. ஏன் என்றால்... ஷாஜகான் படத்தில் விஜய்க்கு ஜோடி கிடையாது. தான் நேசிக்கும் பெண், தன்னுடைய நண்பனை நேசித்தால் இறுதியில் அவர்களது காதலை சேர்த்துவைத்துவிட்டு சிங்கிளாக செல்வர் விஜய்.
ஒரு காதல் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக உருவாகி வரும் நடிகர்கள் ஏற்க தயங்கும் கதை தான் என்றாலும் கூட, தளபதி விஜய் அந்த படத்தை துணிந்து ஏற்று நடித்து அதில் சாதித்தும் காட்டினார். ஷாஜகான் படத்தில் விஜய்க்கு ஜோடி இல்லையே தவிர அந்த படத்தில் அவருக்கு நிறைய பாடல்கள் உண்டு. அந்த வகையில் ஷாஜகான் படத்தில் வந்த "அச்சச்சோ புண்ணை", "காதல் ஒரு தனி கட்சி", "மே மாத மேகம்", "மெல்லினமே மெல்லினமே" மற்றும் "மின்னலை பிடித்து" என்று எல்லா பாடல்களுமே செம ஹிட்டான பாடல்கள்.
இப்படி இந்த திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். அனைத்து பாடல்களுமே அவருக்கும், தளபதி விஜய்க்கு, இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி என்பவருக்கும் மிகப்பெரிய மனதிருப்தியை கொடுப்பது. படபிடிப்பு பணிகள் துவங்கியது, தன்னுடைய பணிகளை முடித்து அடுத்த பணிக்கு செல்ல தயாரானார் வைரமுத்து. அப்படிப்பட்ட நேரத்தில் தான் இந்த திரைப்படத்தின் ரவி ஒருநாள் காலை வைரமுத்துவின் வீட்டிற்கு ஓடோடி சென்று, அவசர அவசரமாக ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து இப்பொது தனது ட்விட்டர் பக்கத்தில் கூட மனம்திறந்திருக்கிறார் வைரமுத்து. அவர் கூறியதாவது.. "ஏற்கனவே ஷாஜகான் திரைப்படத்திற்காக ஆறு பாடல்களை எழுதி கொடுத்து. அது மிகச்சிறந்த முறையில் படக்குழுவிற்கு பிடித்து போக தன்னுடைய அடுத்த பட பணிகளை துவங்க வைரமுத்து சென்றிருக்கிறார். அப்போது அவரிடம் வந்த இயக்குனர் ரவி இந்த திரைப்படத்தில் மற்றொரு பாடல் வேண்டும். தளபதி விஜய் தான் இந்த பாடலை வேண்டுமென்று கேட்டு இருக்கிறார் என்று கூற, நாயகன் சொல்லி எப்படி மறுப்பது என்று நினைத்து ஒரு பாடலை அரைமனதோடு எழுதியுள்ளார் வைரமுத்து.
அது தான் ஷாஜகான் படத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட பாடல், அது ஒரு குத்து பாடல். அதாவது கூத்து பாட்டு தான் நாளடைவில் மருவி குத்து பாட்டு என்றானது என்று கூறியுள்ளார் வைரமுத்து. ஏற்கனவே அட்டகாசமான பல மெலடி பாடல்களை எழுதிய வைரமுத்து. சரக்கு வச்சுருக்கேன்.. இறக்கி வச்சுருக்கேன் என்ற அந்த பாடலை தான் இறுதியாக எழுதிக்கொடுத்துள்ளார். திரையரங்கில் வைரமுத்து மெலடி பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட, விஜய் கேட்ட அந்த குத்து பாட்டுக்கு திரையரங்கம் அதிர்ந்தது, விஜயின் கணக்கு தப்பவில்லை என்று கூறி பாராட்டியுள்ளார் வைரமுத்து.
தன்னை விட 20 வயது மூத்த ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய போகும் விக்ரம் மகள்!!