தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதன் காரணமாக ஷங்கர் அவர்மீது புகார் கொடுத்திருந்தார். ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பத்தா என பெயரிடப்பட்டு உள்ள அப்பாடலை வடிவேலு தான் பாடி இருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த இப்பாடலுக்கு அசல் கோளார் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இப்பாடலுக்கு நடன இயக்குனர் பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.
வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இப்பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இப்பாடல் வரிகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன. அதன்படி இதில் இடம்பெறும் “நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்... சில ‘நாய்’யால நான் சீக்காளி ஆனேன்” என்கிற வரிகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையால் தான் அவர் நடிக்க முடியாமல் போனது என்பது ஊருக்கே தெரியும். அப்படி இருக்கையில் அவரை வம்பிழுக்கும் வகையில் தான் இப்படி ஒரு வரியை அப்பாடலில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் லாஸ்லியா! பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை வளையவளைய காட்டி ஹாட் போட்டோஸ்!