தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கோலோச்சியவர் ஆவார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.