கவிஞர் வாலியைப் பற்றி தெரியாத விஷயங்கள் ஏராளம். 5 நிமிடத்தில் கூட பாடல் வரிகள் எழுதி கொடுப்பதில் கில்லாடி. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். இதில் ஏராளமான பாடல்கள், ஹிட் பாடல்கள். அவர், கோபமாக இருக்கும் போதும் சரி, சந்தோஷம், சோகமான தருணங்களில் என்று பல சந்தர்ப்பங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
26
Vaali write song 5 decades
எம்ஜிஆர் காலத்தில் பாடல் எழுத துவங்கிய வாலி... 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்குரியவர். ரஜினிகாந்த், அஜித், விஜய், கமல்ஹாசன் என பல மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி கொடுத்திருக்கிறார்.
ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் பணியாற்றிய வாலி, அதன் பிறகு ஷங்கருடன் இணைந்து பல பாடல்களில் பணியாற்றியுள்ளார். வாலியின் பாடல்கள் தான் வேண்டும் என, ஷங்கர் 2 நாட்கள் வரை 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களை காக்க வைத்தவர். இதை ஒரு பேட்டியில் வாலியே தெரிவித்துள்ளார்.
46
Prabhu deva
காதலன் படத்தில் எழுதிய ஒரு சுவாரஸ்ய பாடல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, எஸ் பி பாலசுப்பிரமணியன், ரகுவரன், நக்மா, மனோரமா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் காதலன். இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு காரணம் கவிஞர் வாலி. இவரது காவியத்தில் சிறப்பு சேர்ந்த படங்களில் காதலன் படமும் ஒன்று. இந்தப் படத்தில் இடம் பெற்ற முக்காலா முக்காப்புலா என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்களால் ரசிக்க கூடிய ஒரு எனெர்ஜிடிக் பாடலாக இருந்து வருகிறது.
இந்த பாடலின் ஹிட்டுக்கு வாலி ஒரு காரணம் என்றால், அதன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காரணம். இந்த படத்திற்கு இடம்பெற்ற 'முக்காலா முக்காப்புலா' பாடலை பின்னணி பாடகர் மனோ பரோட்டா சாப்பிடும் கேப்பில் வாலி எழுதி விட்டார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை. பாடலின் சுச்சுவேஷன் மற்றும் எப்படி பட்ட பாடல் வேண்டும் என ரகுமான் கூற, மனோவும் ஸ்டுடியோவில் தான் இருந்துள்ளார்.
66
Mano About Hit Song
மனோ பசியில் வயிற்றை தடவ துவங்கி விட்டதால், நீங்க போய் முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க நான் பாடலை எழுதி வைக்கிறேன் என கூறியுள்ளார். மனோ பக்கத்தில் இருந்த ஹோட்டலில், இரண்டு பரோட்டா சாப்பிட்டுவிட்டு வருவதற்குள், அவர் அந்த பாடலை எழுதி வைத்துவிட்டார் என மனோ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.