Tamil Songs with Same Lyrics : சங்க இலக்கியத்தில் இருந்து புகழ்பெற்ற ஒரு வரியை தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் போட்டி போட்டு காப்பி அடித்துள்ளது பற்றி பார்க்கலாம்.
சங்க இலக்கியத்தில் இருந்து புகழ்பெற்ற வரியை எடுத்து அதை தமிழ் சினிமா பாடல்களுக்கு பாடலாசிரியர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்படி குறுந்தொகையில் இருந்து ஒரே வரியை வாலி, வைரமுத்து, யுகபாரதி, கபிலன் உள்பட சில பாடலாசிரியர்கள் தங்கள் பாடல்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். அது என்ன வரி.. எந்தெந்த பாடல்களில் அந்த வரியை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
Vairamuthu
குறுந்தொகை நூலில் ‘செம்புலப் பெயனீர் போல அன்புடைய நெஞ்சம் தாங்கலந் தனயே’ என்று ஒரு பாடல் இருக்கு. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு காதலன் தன்னுடைய காதலியிடம், செம்மண்ணில் கலந்த தண்ணி மாதிரி அன்பால் நாம் சேர்ந்துவிட்டோம் இனி யாராலையும் நம்மை பிரிக்க முடியாது என்பது தான். இந்த குறுந்தொகை பாடல் வரியை பயன்படுத்தி தமிழில் 6 பாடல்கள் வந்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஹிட்டான பாடல் நறுமுகையே. இந்த பாடலை வைரமுத்து எழுதி இருந்தார். அவர் இந்த பாடலில், ‘செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன’ என்கிற வரியில் குறுந்தொகை பாடல் வரியை பயன்படுத்தி இருப்பார்.
அதேபோல் சகா படத்தில் இடம்பெற்று ஹிட்டான யாயும் பாடலில் ஷபீர் இந்த குறுந்தொகை பாடல் வரியை அப்படியே பயன்படுத்தி இருந்தார்.
வாலிபக் கவிஞர் வாலிக்கும் இந்த வரி மீது ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. அவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற முன்பேவா பாடலில் எழுதி இருப்பார். அதில், ‘நீரும் செம்புலச் சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம்’ என்று பயன்படுத்தி இருப்பார் பாடலாசிரியர் வாலி.
45
yuga bharathi
அதேபோல் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த ஜிப்ஸி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மனம் எனும் மாய ஊஞ்சல்’ பாடலில் பாடலாசிரியர் யுக பாரதி இதே வரியை பயன்படுத்தி இருந்தார். அப்பாடலில், ‘நான் மண் சேர்ந்து நீர் போல உன் சாயல் கொண்டேனே’ என அவர் எழுதி இருப்பார்.
55
kabilan
இறுதியாக பாடலாசிரியர் கபிலன், ரமணா இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த சுள்ளான் படத்தில் வித்யாசாகர் இசையில் வெளிவந்த யாரோ நீ பாடலில் பயன்படுத்தி இருப்பார். அதில், ‘உன் குங்குமம் என் வேர்வையில் செம்புலத்தில் நீர் ஆகாதோ’ என பயன்படுத்தி இருப்பார் பாடலாசிரியர் கபிலன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.