குறுந்தொகை நூலில் ‘செம்புலப் பெயனீர் போல அன்புடைய நெஞ்சம் தாங்கலந் தனயே’ என்று ஒரு பாடல் இருக்கு. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு காதலன் தன்னுடைய காதலியிடம், செம்மண்ணில் கலந்த தண்ணி மாதிரி அன்பால் நாம் சேர்ந்துவிட்டோம் இனி யாராலையும் நம்மை பிரிக்க முடியாது என்பது தான். இந்த குறுந்தொகை பாடல் வரியை பயன்படுத்தி தமிழில் 6 பாடல்கள் வந்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஹிட்டான பாடல் நறுமுகையே. இந்த பாடலை வைரமுத்து எழுதி இருந்தார். அவர் இந்த பாடலில், ‘செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன’ என்கிற வரியில் குறுந்தொகை பாடல் வரியை பயன்படுத்தி இருப்பார்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதல் நாள் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ