Vaali Song Secret : யுவன் சங்கர் ராஜா கொடுத்த கஷ்டமான டியூனுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் அடிபொலி ஹிட் அடித்த கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இசை பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்து, தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவர், தனது குடும்பத்தின் இசைப் பயணத்தைத் தொடர்ந்து வந்தாலும், தனது தனித்துவமான இசை பாணியால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான யுவன், அதன் பிறகு ஏராளமான வெற்றிப் பாடல்களையும், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். குறிப்பாக 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களின் இசை ரசனையில் யுவனின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
இயக்குனர் வெங்கட் பிரபுவுடனான யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான காம்போக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ‘சென்னை 28’ தொடங்கி வெங்கட் பிரபுவின் பல படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்த கூட்டணியில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் 2011-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் யுவன் இசையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் பாடல்களான ‘வாடா பின்லேடா’, ‘மச்சி ஓபன் தி பாட்டில்’ உள்ளிட்டவை இன்றளவும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பெற்று வருகின்றன.
34
வாலிக்கு யுவன் வைத்த பரிட்சை
அதேபோல், யுவன் சங்கர் ராஜா மற்றும் மது ஸ்ரீ குரல்களில் உருவான ‘என் நண்பனே என்னை ஏய்த்தாய்’ பாடலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த பாடலின் மெட்டு உருவான விதத்திலும் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. பாடலின் டியூன் மிகவும் வேகமாகவும், சிக்கலான முறையிலும் அமைந்திருந்ததால், அதற்கு ஏற்ப வாலி எப்படி வரிகளை எழுதப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்ததாம். ஆனால் அந்த சவாலை மிகவும் எளிதாக கையாண்ட வாலி, மெட்டின் வேகத்துக்கு இணையாக அழகான வார்த்தைகளை கோர்த்து அசத்தியிருக்கிறார்.
“முதல் வரி முதல் முழுவதும் பிழை, விழிகளின் வழி விழுந்தது மழை, எல்லாம் உன்னால் தான்...” எனத் தொடங்கி, காதல் தோல்வியின் வலியை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகளை அமைத்துள்ளார். மேலும், “இதுவா உந்தன் நியாயங்கள், எனக்கேன் இந்த காயங்கள்... கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்” என பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடினமான மெட்டுக்கேற்றவாறு இவ்வளவு இயல்பாகவும் கவித்துவமாகவும் வரிகளை அமைத்த வாலியின் திறமை, யுவன் சங்கர் ராஜாவையும் வெங்கட் பிரபுவையும் ஆச்சரியப்பட வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘என் நண்பனே என்னை ஏய்த்தாய்’ பாடல் ஒரு இசை அனுபவமாக மட்டுமல்லாமல், வாலியின் கவித்திறனுக்கும் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.