கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்த படம் உணர்ச்சிபூர்வமான நீதிமன்ற அரை நாடகமாக உள்ளது. இந்த படத்தை சாய் பல்லவி தவிர காளி வெங்கட், பருத்திவீரன் புகழ் சரவணன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா....மற்ற மொழிகளிலும் மாஸ் காட்டும் கமலின் விக்ரம்..
கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு செய்ய இரட்டையர்களான ஸ்ரையந்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா ஆகியோர் இசையமைத்துள்ளனர். சதீஷ் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே தெலுங்கில் கடைசியாக சாய் பல்லவி விராட பருவம் படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.