90ஸ் முதல் 2K வரை - பஞ்சுமிட்டாயை வைத்து கோலிவுட்டில் மெகா ஹிட்டான காதல் பாடல்கள்!
Ansgar R |
Published : Oct 20, 2024, 04:39 PM IST
Kollywood Songs : பஞ்சு மிட்டாய் என்ற வார்த்தையை பயன்படுத்தி பல சுவாரசியமான காதல் பாடல்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
தமிழ் மொழியை பொறுத்தவரை, காதலியை நிலவோடும், நீரோடும், தங்கத்தோடும் ஒப்பிட்டு பாடும் பல பாடல்கள் கோலிவுட் வரலாற்றில் பல இருக்கின்றன. அந்த வகையில் தன்னுடைய காதலியை அல்லது காதலனை பஞ்சுமிட்டாயோடு ஒப்பிட்டு ஒரு சில பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த அனைத்து பாடல்களுமே காலம் கடந்து பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட டாப் 3 பாடல்களை தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
கடந்த 1994ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா மற்றும் நக்மா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "காதலன்". இந்த திரைப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் "பேட்ட ராப்" பாடலை மட்டும் தான் இயக்குனர் சங்கர் அவராகவே எழுதியிருப்பார். அதை தவிர மீதம் இருக்கும் எட்டு பாடல்களையும் எழுதியது வாலியும், வைரமுத்தும் தான். அதிலும் குறிப்பாக "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்.. சின்ன தகரம் கூட தங்கம் தானே" என்கின்ற பாடலை மிக அழகாக எழுதியிருப்பார் வாலி. இதில் "பஞ்சுமிட்டாய் 5 ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்சம் ரூபாய்" என்ற வரிகளை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.
34
panchumittai seelai
கடந்த 1997ம் ஆண்டு வெளியாகி தமிழகமெங்கும் சுமார் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படம் தான் "எட்டுப்பட்டி ராசா". நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான மெகாஹிட படமிது. நடிகர் நெப்போலியன் திரை வாழ்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆகும். தேவாவின் இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் அமைக்கப்பட்டது. இந்த ஏழு பாடல்களுக்கான வரியை எழுதியதும் கஸ்தூரிராஜா தான். அதிலும் குறிப்பாக இன்றளவும் பல கிராமத்து திருவிழாக்களில் நம் காதுகளை குளிர்விக்கும் பாடலாக ஒலிப்பது தான் "பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு" என்கின்ற பாடல். இந்த பாடலுக்கு மூவ்மெண்ட் செய்யாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மெகா ஹிட் ஆன பாடல் அது.
44
Water pocket song
இந்த 2024ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ராயன். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தது ஏ.ஆர் ரகுமான் தான். இந்த திரைப்படத்தில் வரும் "அடங்காத அசுரன் நான்" என்கின்ற பாடலையும் "ஓ ராயா பாடலையும்" எழுதியது நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கானா காதர் எழுதிய "வாட்டர் பாக்கெட்" சாங் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் மஜாவா இனிக்கிறியே பஞ்சுமிட்டாயா என்கின்ற வார்த்தை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.