அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் விஜய், அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
மறுபக்கம், துணிவு படத்திற்காக தமிழகம் முழுவதும் தியேட்டர்களை புக் செய்யும் பணிகளில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அதிரடியாக களமிறங்கி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. அதுமட்டுமின்றி துணிவு படத்துக்காக அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இவ்வாறு துணிவு மற்றும் வாரிசு படங்கள் பற்றி அடுத்தடுத்து பல்வேறு விதமான தகவல்கள் பரவி வந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டியில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பொங்கலுக்கு ரிலீசாக உள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு படங்களுக்கும் இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் டிராப் ஆனதா! அறிவிப்பு வந்து 2 வருஷம் ஆகியும் ஷூட்டிங் ஆரம்பிக்காதது ஏன்?