அப்படி ஒன்றிரண்டு தியேட்டரில் மட்டும் வசூலிக்க வாய்ப்பே இல்லை. மொத்தமா தஞ்சாவூர், திருச்சி சேர்த்தே அப்படம் 1 கோடி ரூபாய் தான் கலெக்ட் பண்ணிருக்கும். அப்படி இருக்கும்பொழுது தஞ்சாவூர்ல மட்டும் 50 லட்சம் கலெக்ட் பண்ணதாக சொல்லி தமிழ் சினிமா மார்க்கெட்டையே கெடுக்கிறார். வசூலாகாத படத்தை பிரம்மாண்ட வசூல்னு சொல்லிடுறீங்க, அதனால் நடிகர்களும் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள்.
ஒரு தயாரிப்பாளர் படம் வெற்றி பெற்றால் வெளிப்படையாக சொல்வதைப் போல் தோல்வி படங்களையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவரு என்னடான்னா மூணாவது நாளே செல்வராகவனுக்கு மாலையை போட்டு போட்டோ போடுறாரு. இதெல்லாம் பார்த்தா செல்வராகவன் என்ன நினைப்பாரு, படம் பயங்கரமா வசூல் செய்யுது போல, கர்ணன், அசுரன் ரேஞ்சுக்கு இருக்குதுனு நினைச்சிப்பாரு.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் திருச்சிற்றம்பலம் படத்துடைய 50 சதவீத வசூல் கூட இப்படத்துக்கு கிடைக்கவில்லை. தாணு இப்படி செய்வதெல்லாம் சினிமாவை பின்னோக்கி கொண்டு போவதற்கான செயல். உண்மையை விளம்பரப்படுத்துங்கள், தயவு செய்து பொய்யை விளம்பரப்படுத்தாதீங்க” என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்... என்ன தம்பி உனக்கு ஆம்பளைங்களே புடிக்கமாட்டுது..! பெண்கள் பின்னாடியே சுற்றும் அசலை நோஸ் கட் பண்ணிய ஜிபி முத்து